இலங்கை நாடாளுமன்றத்தில் 1960ம் ஆண்டுமுதல் 1983ம் ஆண்டுவரையில் தொடர்ந்து 23 ஆண்டுகள் உடுவில், மானிப்பாய் தொகுதிகளின் நாடாளுமன்ற உறுப்பினராக

மக்களுக்கு சேவையாற்றி அவர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடத்தைப் பெற்ற விஸ்வநாதர் தர்மலிங்கம் அவர்களின் 34ஆம் ஆண்டு நினைவுதினம் (02.09.2019) காலை 7மணியளவில் யாழ். தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத்தூபிக்கு அருகாமையில் இடம்பெற்றது.

அமரர் தர்மலிங்கம் நினைவுக்குழுவின் தலைவர் நவாலியூர் திரு.க.கௌரிகாந்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நினைவுச்சுடர் ஏற்றல், மௌன அஞ்சலி மற்றும் மலரஞ்சலி இடம்பெற்றதுடன், பேராசிரியர் சிறீசற்குணராசா , செந்தமிழ் சொல்லருவி திரு. ச.லலீசன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

நன்றியுரையினை அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் புதல்வரும், புளொட் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் ஆற்றினார்.

பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, யாழ் மாநகர முதல்வர் ஆர்னோல்ட், பிரதேசசபை தவிசாளர்கள், அங்கத்தவர்கள், நகரசபை உறுப்பினர்கள், முன் னாள் மாகாணசபை உறுப்பினர்கள், ஜனநாயக மக்கள் விடுதலை முன் னணியின் (புளொட்) உயர்பீட அங்கத்தவர்கள், மத்தியகுழு உறுப்பினர்கள், அங்கத்தவர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தார்கள்.