21.09.2019 சனிக்கிழமை அன்று ஜெர்மனி ஸ்ருட்கார்ட் நகரில் இடம்பெற்ற சர்வதேச கலாச்சார நிகழ்வில் இலங்கையர் ஜனநாயக முன்னணியினரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

அத்துடன் வழக்கம்போல இம் முறையும் தமிழ் மக்களின் பண்பாட்டுத் தன்மையுடன் கூடிய பாரம்பரிய உணவு வகைகளை நிகழ்விற்கு வருகை தந்திருந்த உள்ளூர் மற்றும் வெளிநாட்டு மக்களிடம் அறிமுகம் செய்து வைத்திருந்தனர்.

இந் நிகழ்வால் கிடைக்கப்பெறும் நிதியைக் கொண்டு , ‘இலங்கையர் ஜனநாயக முன்னணி’ அமைப்பினர் தாயக மக்களின் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு பங்களிப்புச் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.