எதிர்வரும் மாதம் 11 ஆம் திகதி நடைபெறவுள்ள எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு இன்று இடம்பெறவுள்ளது. 
இன்று தபால் மூலம் வாக்களிக்க முடியாதவர்கள் அடுத்த மாதம் 4 ஆம் திகதி தபால் மூலம் வாக்களிக்க சந்தர்ப்பம் உண்டு என்று தேர்தல் அணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

காலி மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்தில் இதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

தபால் மூலம் வாக்களிப்பதற்காக தேசிய அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணைக்குழு அனுமதித்துள்ள அடையாள அட்டையை எடுத்துச்செல்ல வேண்டும்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)