சம்பள முரண்பாட்டை முதன்மையாக கொண்டு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் முன்னெடுத்துள்ள பணிபகிஷ்கரிப்பு போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்ட முன்னணி தெரிவித்துள்ளது.

தமது பிரச்சினைகளுக்கு அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள போதும், வேதன ஆணைக்குழுவால் குறித்த பரிந்துரைகள் செயற்படுத்தப்படாமையினால் பணிபகிஷ்கரிப்பை தொடர்ச்சியாக முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அந்த முன்னணியின் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.