நாளை நள்ளிரவு 12.00 மணியுடன் ஊவா மாகாணத்தின் 6ஆவது மாகாண சபையின் உத்தியோகபூர்வ கால எல்லை நிறைவடைகின்றது.

கடந்த 5 வருடத்தில் 5 ஆளுநர்களும், 3 முதலமைச்சர்களும் இந்த மாகாண சபையை முன்னெடுத்துள்ளனர். சஷிந்திர ராஜபக்ஷ, ஹரின் பெர்னான்டோ ஆகிய முதலமைச்சர்களுக்கு பின்னர் ஊவா மாகாண சபையின் முதலமைச்சராக சாமர சம்பத் தசநாயக்க கடமை வகித்திருந்தார்.