ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக, வேட்புமனு தாக்கல் ஆரம்பமாகியுள்ளது. வேட்பாளர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.

ராஜகிரிய மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளும் வாகன போக்குவரத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. காலை 9 மணிமுதல் 11 மணிவரையான காலத்தில் இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய முடியும். தேர்தலில் போட்டியிடுவதற்காக மொத்தம் 41 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.