ஆசிய கடற் பாதுகாப்பின் பிரதான மாநாட்டின் 15ஆவது கூட்டம் இலங்கையில் இடம்பெறவுள்ளது. இலங்கை கடற் பாதுகாப்புத் திணைக்களம் இம்மாநாட்டுக்கான ஏற்பாடுகளை செய்துள்ளதுடன், இந்த மாநாடு இலங்கையில் இடம்பெறுவது இதுவே முதன் முறையென்பதுவும் குறிப்பிடதக்கது.

இது தொடர்பான செயற்பாட்டு பிரதிநிதிகளின் கூட்டம் கொழும்பு கோல்ஃபேஸ் ஹொட்டலில் இன்று ஆரம்பமானது. மேலும், இந்தக் கூட்டம் எதிர்வரும் வியாழக்கிழமை வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.