Header image alt text

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் நாளை நடைபெறவுள்ளதுடன், எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் வாக்களிக்க 53 384 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

எல்பிட்டிய தொழிற்பயிற்சி அதிகார சபையிலிருந்து வாக்குப்பெட்டிகளை விநியோகிக்கும் செயற்பாடுகள் இன்று ஆரம்பமாகியுள்ளன. முழுமையான பாதுகாப்புடன் வாக்குப்பெட்டிகள் உள்ளிட்ட ஏனைய பொருட்களை வாக்குச் சாவடிகளுக்கு அனுப்புவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக காலி மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகர் சோமரத்ன விதான பத்திரண தெரிவித்துள்ளார். Read more

ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டை அச்சிடும் பணிகள் காவல்துறை பாதுகாப்புடன் அரசாங்க அச்சுத் திணைக்களத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதித் தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்களின் பெயர்களை அகர வரிசைப்படி முறைப்படுத்தி தேர்தல்கள் ஆணைக்குழு, அரசாங்க அச்சுத் திணைக்களத்திற்கு கடந்த தினம் அனுப்பிவைத்திருந்தது. இந்த நிலையில், சுமார் ஒரு கோடியே 60 இலட்சம் வாக்குச்சீட்டுக்கள் எதிர்வரும் தினங்களுக்குள் அச்சிடப்படவுள்ளதாக தே;தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். Read more