எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் நாளை நடைபெறவுள்ளதுடன், எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் வாக்களிக்க 53 384 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
எல்பிட்டிய தொழிற்பயிற்சி அதிகார சபையிலிருந்து வாக்குப்பெட்டிகளை விநியோகிக்கும் செயற்பாடுகள் இன்று ஆரம்பமாகியுள்ளன. முழுமையான பாதுகாப்புடன் வாக்குப்பெட்டிகள் உள்ளிட்ட ஏனைய பொருட்களை வாக்குச் சாவடிகளுக்கு அனுப்புவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக காலி மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகர் சோமரத்ன விதான பத்திரண தெரிவித்துள்ளார். Read more