எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் இன்று காலை 7 மணிமுதல் மாலை 4 மணிவரை நடைபெற்று நிறைவடைந்துள்ளது. 47 வாக்களிப்பு நிலையங்களில் இடம்பெற்ற வாக்களிப்பில் காலை 7மணிமுதல் மாலை 4மணிவரை 72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
வாக்களிப்பு நடவடிக்கைகள் மிக வெற்றிகரமாக இடம்பெற்றதாக காலி மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகர் சோமரத்ன விதாரபத்திரன தெரிவித்துள்ளார். இந்த தேர்தலில் 53,384 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். Read more