கொழும்பு யுனியன் பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றில் 33 வது மாடியில் இருந்து வீழ்ந்து அவுஸ்திரேலியா பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்றுகாலையில் இச்சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது.

52 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலீஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலிய நாட்டவரான போல் ஜேம்ஸ் (வயது 52) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பிரதேசப் பரிசோதனைக்காக வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.