ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் ஒக்டோபர் 8 ஆம் திகதியில் இருந்து இதுவரை 269 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் வன்முறைகள், விதிமீறல்கள் உள்ளிட்டவை தொடர்பில் இந்த முறைப்பாடுகள் இவ்வாறு முன்வைக்கப்பட்டுள்ளன. நேற்றைய தினம் இரண்டு வன்முறை சம்பவங்கள், 109 சட்டமீறல்கள் மற்றும் இரண்டு வேறு விடயங்கள் குறித்து முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.