பல்கலைகழக கல்விசாரா பணியாளர்கள் கடந்த ஒரு மாதகாலமாக முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. பல்கலைகழக தொழிற்சங்க ஒன்றிணைந்த குழுவின் இணைத்தலைவர் டம்மிக எஸ்.பிரியன்த இதனை தெரிவித்துள்ளார்.

வேதன பிரச்சினைகளை முன்னிறுத்த கடந்த 34 நாட்களாக பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதற்கமைய ஒரு மாத காலப்பகுதியில் வேதன பிரச்சினைக்கு தீர்வு பெற்று தருவதாக வழங்கப்பட்ட உறுதிமொழியை அடுத்து இந்த போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.