ஜப்பானில் ஏற்பட்டுள்ள ஹெகிபிஸ் சூறாவளி காரணமாக அங்கு செல்லும் விமானம் 7 மணி நேரம் தாமதமாகியே பயணிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கன் வான் சேவை நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது. அந்த சூறாவளி இன்று பிற்பகல் ஜப்பானை கடக்கவுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கமைய இன்று இரவு 7.15 அளவில் ஜப்பான் – நரீடா நோக்கி பயணிக்கவிருந்த ஸ்ரீலங்கன் வானுர்தி சேவைக்கு சொந்தமான யூ.எல். 460 ரக வானுர்தி நாளை அதிகாலை 2.15 அளவில் பயணிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விபரங்களை 0 117 77 19 79 என்ற தொலைபேசி இலக்கம் ஊடாக தொடர்பு கொண்டு அறிந்து கொள்ள முடியும் என ஸ்ரீ லங்கன் விமான சேவை தெரிவித்துள்ளது.