ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் முறைப்பாடுகளை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்றுடன் நிறைவடையவுள்ளது.

குறித்த ஆணைக்குழுவில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஜகத் டி சில்வாவின் தலைமையிலான ஐந்து பேர் அங்கம் வகிக்கின்றனர். பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு அதற்குரிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக இந்த குழு நியமிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.