சிலாபம் பகுதியில் சந்தேகமான முறையில் சுற்றுலா விடுதியொன்றில் தங்கியிருந்த 6 தமிழ் இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் கோப்பாய் மற்றும் வல்வெட்டித்துறை ஆகிய பிரதேசங்களில் வசித்து வருபவர்கள் என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், மேற்படி சந்தேக நபர்கள் கடல் வழியாக வெளிநாட்டுக்கு தப்பிச் செல்வதற்காக குறித்த சுற்றுலா விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.