இந்திய தொழிநுட்ப அதிகாரிகள் குழுவுடன் இந்தியாவின் எயார் இந்திய அலைன்ஸ் விமானம் ஒன்று இன்று யாழ். பலாலி விமான நிலையத்தில் தரை இறங்கியுள்ளது.

குறித்த விமானத்தில் வருகை தந்திருந்த இந்திய அதிகாரிகள் பலாலி ஓடுபாதை பரிசோதனை, கட்டுப்பாட்டு கோபுரம் மற்றும் விமான நிலையத்தின் செயற்பாடுகள் குறித்து ஆராயவுள்ளனர். இதேவேளை 17 ஆம் திகதி விமான நிலைய திறப்பு விழாவுக்கான மேடை அமைக்கும் பணிகளும் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.