ஜப்பானின் இலங்கைக்கான தூதுவர் இன்று கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுவரும் கட்டடத்தின் பணிகள் தொடர்பில் கண்காணிப்பு விஜயம் ஒன்றின் நிமித்தம் காரணமாகவே ஜப்பானின் இலங்கைக்கான தூதுவர் அகிரா சுகியாமா (Akira Sugiyama) இந்த விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.

ஜப்பானின் இலங்கைக்கான தூதுவர் அகிரா சுகியாமா, குறித்த கட்டடப் பணிகளைப் பார்வையிட்டதைத் தொடர்ந்து பல்கலைக்கழக சமூகத்தினருடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.