ஜனா­தி­பதித் தேர்­தலில் தமிழ் மக்­களின் பிரச்­சி­னைகள் தொடர்பில் பொது­வான நிலைப்­பாட்டில் ஐந்து தமிழ் தேசிய கட்­சிகள் 13 கோரிக்­கை­களை முன்­வைத்­துள்­ள­மைக்கு பௌத்த மத­குரு­மார்கள் கடும் எதிர்ப்­பினை வெளி­யிட்­டுள்­ளனர்.

அத்­தோடு இந்த 13 கோரிக்­கை­களில் ஒன்­றான ஒற்­றை­யாட்சி நீக்­கப்­பட வேண்டும் என்ற கோரிக்­கையை துளி­ய­ளவும் ஏற்க முடி­யாது என இவர்கள் தெரி­வித்­துள்­ள­தோடு, கோத்­த­பாய ராஜ­பக்ஷ ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்­யப்­பட்டால் அவர் தமிழ் அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு புனர்­வாழ்­வ­ளிக்க வேண்டும் என்றும் கடு­மை­யாக சாடி­யுள்­ளனர்.இவ்­வி­டயம் தொடர்பில் ஓமல்பே சோபித தேரர் குறிப்­பி­டு­கையில்,

மகா­வலி குடி­யேற்ற திட்டம் நீக்­கப்­பட வேண்டும் என்றும் ஒரு­மைப்­பாடு அல்­லது ஒற்­றை­யாட்சி முழு­மை­யாக நீக்­கப்­பட வேண்டும் என்றும் 13 கோரிக்­கை­களை தமிழ் கட்­சிகள் முன்­வைத்­துள்­ளன. இந்த கோரிக்­கை­களை எந்த கட்சி ஏற்றுக் கொள்­கின்­றது என்­பதை நாமும் ஆர்­வத்­துடன் எதிர்­பார்த்­தி­ருக்­கின்றோம். எந்­த­வொரு வேட்­பா­ள­ருக்கும் இவற்றை கையி­லெ­டுத்து வாசிப்­ப­தற்கு கூட உரிமை கிடை­யாது என்று குறிப்­பிட்டார்.

எல்லே குண­வங்ச தேரர் குறிப்­பி­டு­கையில்,
ஜனா­தி­பதித் தேர்­தலை முன்­னிட்டு 5 தமிழ் கட்­சிகள் முன்­வைத்­துள்ள கோரிக்­கை­களில் ஒற்­றை­யாட்சி நீக்­கப்­பட வேண்டும் என்ற கோரிக்­கையை ஒரு­போதும் ஏற்றுக் கொள்ள முடி­யாது. குறிப்­பாக வடக்கு மற்றும் கிழக்கை சுய­நிர்­ணய எல்­லை­யாகக் கோரு­கின்­றனர். இவர்கள் முழு இலங்­கை­யையும் சுய­நிர்­ணய எல்­லை­யாகக் கோரி­னாலும் அதை நாம் ஏற்றுக் கொள்வோம். ஆனால் வடக்கை மாத்­திரம் கோரு­வதை ஏற்க முடி­யாது.

மீண்டும் அடிப்­ப­டை­வா­தி­களை உரு­வாக்­கு­வ­தற்­கான முயற்­சி­களே தற்­போது மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. ஒரு­புறம் முஸ்லிம் அடிப்­ப­டை­வா­தி­க­களும் மறு­புறம் தமிழ் அடிப்­ப­டை­வா­தி­களும் செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றனர். உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு இது வரையில் தீர்வு வழங்­கப்­ப­ட­வில்லை என்று பேராயர் கர்­தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்­டகை என்னை சந்­தி­தத்த போது கூறினார்.

தாக்­கு­தல்­க­ளுடன் தொடர்­பு­டைய குற்­ற­வா­ளி­களை இன்­னமும் இந்த அர­சாங்­கத்தால் கண்டு பிடிக்க முடி­யா­துள்­ளது. இந்­நி­லையில் இந்த அர­சாங்கம் ஆட்­சியில் இருந்தும் என்ன பயன்? எனவே இம்­முறை மக்கள் தமது வாக்­கு­களை முறை­யாக பயன்­ப­டுத்த வேண்டும் என்றார்.

மாகல்­கந்தே தேரர் குறிப்­பி­டு­கையில்,

தமிழ் அர­சி­யல்­வா­தி­களின் இந்த அடிப்­ப­டை­வாத கோரிக்­கை­களை ஏற்றுக் கொள்ள முடி­யாது. விடு­தலைப் புலிகள் இயக்­கத்தின் தலைவர் பிர­பா­க­ரனை தோல்­வி­யடைச் செய்த போதிலும் தமிழ் அரசியல்வாதிகளுக்கு புனர்வாழ்வளிக்க முடியாமல் போயுள்ளது.

விடுதலைப்புலிகளின் கொள்கைகளை மீண்டும் கொண்டு வர முயற்சிக்கும் தமிழ் அரசியல்வாதிகளுக்கு கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாதன் பின்னர் புனர்வாழ்வளிக்குமாறு கோருகின்றேன் என்றார்.