முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீரங்கா உள்ளிட்ட ஆறு பேர், வவுனியா நீதிமன்றத்தால் இன்று பிணையில் விடுக்கவிக்கப்பட்டுள்ளனர். குறித்த ஆறு பேரையும், கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு சட்டமா அதிபர், பொலிஸாருக்கு நேற்று முன்தினம் ஆலோசனை வழங்கியிருந்தார்.

அத்துடன், அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து வவுனியா நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறும் சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியிருந்தார். இந்த நிலையில், அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. வவுனியா செட்டிக்குளம் பகுதியில் 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் திகதி இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பான வழக்கில் அவர்களுக்கு இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளது.