மன்னாரில் பொலிஸார் உள்ளிட்ட இருவர் 180 கிலோகிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார். சொகுசு வாகனமொன்றில் குறித்த மூவரும் பயணித்துக்கொண்டிருந்தபோது, கடற்படையினரின் சோதனைச் சாவடியில் குறித்த வாகனத்தை நிறுத்துமாறு கடற்படையினர் சமிக்ஞை செய்துள்ளனர்.

எனினும் குறித்த வாகனம் நிறுத்தாமல் சென்றதைத் தொடர்ந்து குறித்த வாகனத்தின் மீது கடற்படையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு நிறுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.