ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான புதிய கூட்டணிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

கொழும்பு, தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெறும் நிகழ்வில் அரசியல் கூட்டணி அமைக்கும் நோக்கிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளும், புதிய ஜனநாயக முன்னணி பிரசாரத்தில் இணைந்துக்கொண்டுள்ள கட்சிகளும், சிவில் சமூக குழுக்களும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன. நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் பங்கேற்றிருந்தார்.