ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பின் போது வாக்குச்சீட்டினை புகைப்படம் எடுத்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு ஆசிரியர்களும் மற்றும் ஒரு கண்காணிப்பாளர் ஒருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார்.

அவர்கள் குறித்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி பகிர்ந்துள்ளனர். மேற்படி சம்பவம் தொடர்பில் தற்போது விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.