இலங்கைக்கு மேலே தூசுத் துகள்கள் அதிகரித்தைமைக்கான காரணத்தை அறிந்துகொள்ளும் நோக்கில் உலக சுகாதார நிறுவனத்தின் உதவியை கோரியுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அதிகார சபையின் பிரதி பணிப்பாளர் நாயகம் கே.எச்.முத்குடஆராய்ச்சி கூறுகையில், மேற்படி தூசுத் துகள்கள் எவ்வாறு நாட்டுக்குள் வந்துள்ளது என்பதை கண்டறியுமாறு வானிலை ஆராய்ச்சி மையம் எம்மிடம் அறிவித்தலொன்றை விடுத்துள்ளது.எனவே இது தொடர்பில் நாம் உலக சுகாதார நிறுவனத்திடம் வேண்டுகோள் ஒன்றினை முன்வைத்து உள்ளோம். அதன்படி, உலக சுகாதார நிறுவனம் இது தொடர்பில் ஆராய்ந்து எமக்கு அறிக்கையொன்றை கையளிக்கவுள்ளனர்.

எனவே எமக்கு விரைவில் இதற்கான காரணம் தெரியவரும் என்று குறிப்பிட்டுள்ளார். கொழும்பு நகருக்கு மேல் வளிமண்டலத்தில் உள்ள தூசுத் துகள்களின் எண்ணிக்கை நூற்றுக்கு நூறு சதவீதத்தை விடவும் அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.