ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கை நேற்றுடன் நிறைவடைந்துள்ளது.

வாக்காளர் அட்டைகள் கிடைக்காதோர் அருகிலுள்ள தபால் நிலையத்திற்கு சென்று அவற்றை பெறமுடியும் எனவும் கூறப்படுகின்றது. இதேவேளை, ஆள் அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு தற்காலிகமாக 3 இலட்சம் தற்காலிக அடையாள அட்டைகளை வழங்க ஆட்பதிவு திணைக்களம் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. (அரசாங்க தகவல் திணைக்களம்)