கலாநிதி இங்குருவத்தே சுமங்கல தேரர், உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று ஆரம்பித்துள்ளார். கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் தேரர் இந்த உண்ணாவிரதப் போராட்டதில் ஈடுபட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்கப் பிரஜாவுரிமையை நீக்கிக்கொண்டமை தொடர்பில் 3 நாட்களுக்குள் உறுதிப்படுத்த கோரி அவர் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.