Header image alt text

தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைத்துள்ள தற்காலிக அடையாள அட்டைகள் இன்று முதல் விநியோகிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்காக ஆட்பதிவு திணைக்களத்தினால் 3 இலட்சம் தற்காலிக அடையாள அட்டைகள் கடந்த 9 ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, தற்காலிக அடையாள அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் நாளை மறுதினம் நண்பகல் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 3,519 ஆக அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 26 முறைப்பாடுகளும் தேர்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் 3,387 முறைப்பாடுகளும் ஏனைய சம்பவங்கள் தொடர்பில் 106 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றன. Read more

சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக வெளிநாடு செல்ல முயற்சித்த 8 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு சட்ட விரோதமாக கடல் மார்க்கமாக வெளிநாடு செல்ல முயற்சித்த 8 பேரும் மன்னார் மாவட்டத்தின் தலைமன்னார் பகுதியில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். Read more