2019 ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலை 5.00 மணியுடன் நிறைவடைந்துள்ளது.ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகியிருந்த நிலையில், வாக்களிப்பு நிறைவடையும் போது நாடளாவிய ரீதியில் சில மாவட்டங்களில் சுமார் 70 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இம்முறை ஏற்றுக் கொள்ளப்பட்ட 20 அரசியல் கட்சிகள் மற்றும் 15 சுயேட்சைக் குழுக்களும் தேர்தலில் போட்டியிட வேட்புமனுக்களை தாக்கல் செய்தன.

புதிய ஜனநாயக முன்னணி சார்பாக அமைச்சர் சஜித் பிரேமதாசவும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் கோட்டாபய ராஜபக்ஷவும் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

மேலும் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க ஒருகோடியே 59 இலட்சத்து 92,096 பேர் தகுதி பெற்றிருந்தனர்.

நாடு பூராகவுமுள்ள 12,845 தேர்தல் மத்திய நிலையங்களில் வாக்களிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்நிலையில், வாக்களிப்புக்கள் நிறைவடைந்துள்ள நிலையில், வாக்கெண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.