ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் ரியாஸ் ஹமிதுல்லாவுக்குமிடையில், ஜனாதிபதி செயலகத்தில் நேற்று சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது பங்களாதேஷ் அரசு சார்பில், உயர்ஸ்தானிகர், புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அத்துடன் இரு நாடுகளுக்குமிடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் ஆராயப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.