ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றிக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாதிமிர் புட்டின் வாழ்த்து தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகத்திற்கு கடிதம் மூலம் அவர் இந்த வாழ்த்துச் செய்தியை அறிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கிடையிலான தொடர்புகளை வலுப்படுத்தவும், சமாதானம், நல்லிணக்கம் என்பவற்றை ஏற்படுத்துவதற்காகாகவும், இணைந்து செயற்பட எதிர்பார்ப்பதாகவும் ரஷ்ய ஜனாதிபதி வாழ்த்துச் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார். (அரசாங்க தகவல் திணைக்களம்)