வவுனியா – நைனாமடு பகுதியில், நேற்று (23), புதையல் தோண்டிய 6 பேரை, புளியங்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள், மரக்காரம்பளை, ஓமந்தை, நெடுங்கேணி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களெனவும் இவர்கள் இவ்வாறு 39, 40, 42, 44, 46,56 வயதுடையவர்களெனவும், பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று முன்தினமிரவு 11.30, மணியளவில், நைனாமடு பகுதியிலுள்ள வெற்றுக்காணி ஒன்றில், 6 பேரடங்கிய குழுவினர் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், குறித்த 6 பேரையும் கைதுசெய்தனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து, மண்வெட்டி, பூஜைப் பொருள்கள், மோட்டார் சைக்கிள், ஓட்டோ என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.