சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளுடன்´ தமிழ் மொழியில் காட்சிபடுத்தப்பட்டிருந்த பெயர் பலகை ஒன்றை நீக்கிய சம்பவம் தொடர்பில் பானந்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது.வீதியின் ஒன்றின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்த பெயர் பலகை ஒன்றே இவ்வாறு நீக்கப்பட்டிருந்தது.

குறித்த முறைபாடு தொடர்பில் பானந்துறை தெற்கு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இனங்களுக்கு இடையில் நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை சீர்குலைக்கும் விதமான இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு இன்று (25) சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.