ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தலைமையிலான அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் நாளை (27) இடம்பெறவுள்ளது.அமைச்சர் பந்துல குணவர்தன இதனை இன்று (26) தெரிவித்துள்ளார்.

வெகுஜன ஊடகத்துறை அமைச்சில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்ட போது, அமைச்சரவை கூட்டம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பினர்.

அதற்கு பதிலளித்த பந்துல குணவர்தன, நாளைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளதாக கூறியுள்ளார்.