யாழ். பாசையூர் அந்தோனியார் தேவாலயத்திற்கு அருகில் உள்ள கடற்கரை பகுதியில் இருந்து 2 கிலோ வெடிமருந்து மீட்கப்பட்டதாக யாழ்ப்பாணம் விசேட அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை குறித்த வெடிமருந்து மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இராணுவப் புலனாய்வாலருக்கு கிடைத்த ரகசிய தகவலுக்கு அமைய பொலிஸ் விசேட அதிரடி படையினர் மேற்கொண்ட திடீர் தேடுதல் நடவடிக்கையின் போது இந்த வெடிமருந்து கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் தெரிவித்தனர். மேற்படி வெடிமருந்து தடை செய்யப்பட்ட மீன்பிடி நடவடிக்கைக்காக கொண்டு வரப்பட்ட இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.