Header image alt text

அம்பாறை அக்கரைப்பற்று கண்ணகிபுரம் மலையடிவாரம் பகுதியில் வெட்டுக்காயங்களுடன் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

அக்கரைப்பற்று சின்னப்பனங்காடு, புளியம்பத்தை பகுதியை சேர்ந்த 29 வயதான விநாயகமூர்த்தி தேவரூபன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இரண்டு நாட்களாக அவர் காணாமற்போயிருந்த நிலையில், இன்று சடலம் மீட்கப்பட்டுள்ளாரென கூறப்படுகின்றது. Read more

அனைத்து அரசியல் கட்சிகளினதும் தலைவர்களுக்கும் செயலாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

எதிர்வரும் 4 ஆம் திகதி காலை 10 மணிக்கு கட்சிகளின் தலைவர்கள் மற்றும் செயலாளர்களுகு;கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். Read more

இலங்கையின் வடக்கு பகுதிகளில் கண்ணி வெடி அகற்றும் பணிகளுக்காக ஜப்பானிய அரசாங்கம் ஆறு லட்சத்து 35 ஆயிரத்து 420 அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளதாக ஜப்பானிய தூதரகம்ப தெரிவித்துள்ளது.

இந்த நிதி கண்ணிவெடி அகற்றும் ஆலோசனை குழுவொன்றின் மனிதாபிமான அமைப்பின் ஊடாக வழங்கப்பட்டுள்ளது. Read more

2020ம் ஆண்டளவில் அனைத்து பாடசாலைகளிலும் ஆரம்ப கல்வியை மேம்படுத்துவதற்காக 50 ஆயிரம் ஆசிரியர் உதவியாளர்களை இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் மற்றும் தொடர்பாடல், உயர் கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஹோமாகமவில் இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

ரயிலில் இருந்து விழுந்து காயமடைந்த கனடா நாட்டவர் ஒருவர் சிகிச்சைக்காக மாரவில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்திரராஜா என்ற 82 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்றிரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த கனடா நாட்டவர் சிலாபம் பிரதேசத்தில் வசித்து வரும் தனது உறவினர்களை சந்தித்த பின்னர் மீண்டும் கொழும்பு திரும்பிக் கொண்டிருந்த போது Read more

குடும்ப தகராறு காரணமான கணவன் மீது மனைவி தேங்காய் திருவும் திருவலைக் கட்டையால் தாக்கியதில் கணவன் உயிரிழந்த சம்பவம் நேற்று இரவு மட்டக்களப்பு, கிரான் கோரக்களிமடு பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் மனைவியை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாகவும் ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிரான், கோரக்களிமடு, முருகன் கோவில் வீதியைச் சேர்ந்த முன்னாள் போராளியான 49 வயதுடைய 2 பிள்ளைகளின் தந்தையான பிள்ளையான் பாலசுப்பிரமணியம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். Read more

அரச மற்றும் அரச அனுமதியுடன் இயங்கும் பாடசலைகளில் 2019ஆம் ஆண்டுக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று நிறைவடைகின்றது. இதனை கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், 2020ஆம் ஆண்டுக்கான பாடசாலை கல்வி நடவடிக்கை ஜனவரி மாதம் 02ஆம் திகதி ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. Read more

யாழ்தேவி தொடரூந்து தடம் புரண்டதன் காரணமாக பாதிக்கப்பட்ட தொடரூந்து போக்குவரத்து இன்று வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடருந்து கட்டுப்பாட்டாளர் வஜிர பொல்வத்த இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இன்றையதினம் காலை மீண்டும் கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரையிலான தொடரூந்து சேவை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். Read more

சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. பிரதமரின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் அஜித் நிவாட் கப்ரால் இதனைத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துக்கும் இலங்கைக்கும் இடையிலான கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பாக மீள்மதிப்பீடு செய்யப்பட வேண்டும். பொருளாதார மேம்பாட்டை இலக்காக கொண்டு இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். இது தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்துடனும் கலந்துரையாடப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய பதவி விலகும் தீர்மானத்தினை ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாக சபாநாயகர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைத்துள்ளதுடன் சபாநாயகருக்கும் தனது கடித்தை அனுப்பி வைத்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.