மட்டக்களப்பு, காஞ்சூரம்குடா, வேக்கந்தசேனை வயல் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் இருந்து 24 கைக்குண்டுகளை விசேட அதிரடிப்படையினர் வெடிகுண்டு பிரிவினரால் நேற்று (30) மீட்டு அப்பகுதியில் வெடிக்க வைத்துள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள குறித்த பகுதியில் வயல் பகுதிக்கு அருகில் மண்மேடு ஒன்றில் மண் அகழப்பட்ட நிலையில் உள்ள பகுதியில் கைக் குண்டுகள் இருந்துள்ளதை கண்டு அங்கு விவசாய நடவடிக்கைக்கு சென்ற விவசாயிகள் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளார். இதனை அடுத்து குறித்த பகுதியில் கைவிடப்பட்ட கைக்குண்டுகளை விசேட அதிரடிப்படையின் பார்வையிட்டு வெடிக்க வைக்க நீதிமன்ற உத்தரவை பெற்று அந்த பகுதியில் மண்அகழ்வும் இயந்திரம் கொண்டு நேற்று பகல் மேலும் தேடுதல் ஈடுபட்ட நிலையில் 24 கைக்குண்டுகளை மீட்டு உடன் வெடிக்க வைத்தனர்.

முன்பு புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த இப்பகுதியான இந்த பகுதியிலுள்ள இந்த மண் மேட்டில் புலிகள் நிலத்தில் புதைத்து வைத்திருக்கலாம் என சந்தேகிப்பதுடன், இந்த மண்மேடு மண்அகழ்வின் பின்னர் தற்போது பெய்துவரும் கனமழையினால் மண் அரிக்கப்பட்டு இந்த குண்டுகள் வெளியே தென்பட்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.