நுவரெலியா – வலப்பனை – மலப்பத்தாவையில் நேற்றிரவு வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் காணாமல் போயிருந்த நான்கு பேரில் மூன்று பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனனர்.

குறித்த மண்சரிவில் சிக்குண்டுள்ள மற்றுமொருவரை தேடும் பணியை இராணுவத்தினர் தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய் மற்றும் மகள் ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.