வவுனியா பூந்தோட்டம் அண்ணாநகர் பகுதியில் புதையல் தோண்டிய சகோதரர்கள் மூவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனார். கைதானவர்கள் 16, 19 மற்றும் 21 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதானவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.