Header image alt text

பத்திரிகை அறிக்கை

Posted by plotenewseditor on 4 December 2019
Posted in செய்திகள் 

முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள சர்ச்சைக்குரிய விகாரையில் கடந்த 30ம் திகதி முன்றரையடி உயர புத்தபகவான் உருவச்சிலை ஒன்று பாணந்துறைப் பிரதேசத்தில் இருந்து வந்த அசங்க சாமர என்பவர் தலைமையிலான குழுவினரால் பிரதிட்டை செய்யப்பட்ட விடயம், பொதுஜன பெரமுன ஆட்சி குறித்து தமிழ்மக்கள் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பு கொண்டிருந்த அச்ச உணர்வை நியாயப்படுத்துவதாகவே அமைந்துள்ளது.

இரண்டு தரப்பினரதும் வழிபாட்டு நடவடிக்கைகளை தவிர, எந்தவித கட்டுமானப் பணிகளும் முன்னெடுப்பதற்கான தடையுத்தரவை நீதிமன்று வழங்கியுள்ள நிலையிலேயே, அவ்வுத்தரவை அவமதிக்கும் வகையிலும், தமிழ்மக்களை அச்சம் கொள்ள வைக்கும் வகையிலுமே மேற்படி நடவடிக்கை சிங்கள பௌத்த கடும் போக்குவாதிகளால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. Read more

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) தாயகப் பகுதியில் மேற்கொண்டு வரும் செயற்திட்டங்களில் ஒன்றான, உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கான வாழ்வாதார உதவித் திட்டத்தின் கீழ்,

கடந்த தேர்தல் காலங்களில் அமைப்பின் செயற்பாடுகளுக்கு உறுதுணையாக செயற்பட்ட புதுக்குடியிருப்பு, தேராவில் கிராமத்தைச் சேர்ந்த பெண் தலைமைத்துவக் குடும்பத்திற்கு, அவர்களது பொருளாதார நிலையை மேம்படுத்தும் நோக்கில், அரை ஏக்கர் மேட்டுநிலப் பயிர்ச்செய்கைக் காணிக்கான தூவல் நீர்ப்பாசனத் தொகுதி ஒன்று அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

விவசாயத்தை மட்டும் ஆதாரமாகக் கொண்டு வாழும் அக்குடும்பத்தின் கோரிக்கை, சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் கட்சி நிர்வாகிகளால் பரிசீலிக்கப்பட்டு மேற்படி உதவி வழங்கப்பட்டுள்ளது. Read more

வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

வட மத்திய மாகாண ஆளுநராக திஸ்ஸ விதாரணவும், கிழக்கு மாகாண ஆளுநராக அனுராதா யஹம்பத் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். Read more

நாடாளுமன்ற பொதுத்தேர்தல் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் 25, 27 அல்லது 28 ஆகிய தினமொன்றில் நடத்துவதற்கு முடியும் என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் மார்ச் மாதம் முதலாவது வாரத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் ஏப்ரல் மாதத்தில் பொதுத்தேர்தலை நடத்த முடியும் என்றார் அவர்.

மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா சஹீட், இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

அவர் இன்றைய தினம்இரவு இலங்கையை வந்தடைவார் என தெரிவிக்கப்படுகின்றது. இலங்கைக்கு வரும் மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவை சந்திக்கவுள்ளார்.

புங்குடுதீவில், கடற்படை கட்டளை முகாம் நிர்மாணிப்பதற்கு, அப்பகுதியில் உள்ள 14 ஏக்கர் காணிகள் சுவீகரிக்கப்படவுள்ளனவென, வேலணை பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

இது குறித்துத் தொடர்ந்தரைத்த அவர், புங்குடுதீவு கிழக்கில் உள்ள 9ஆம் வட்டாரம், வல்லன், மலையடி நாச்சியார் கோவிலுக்கு அருகில் உள்ள தனியார் காணிகளே, இவ்வாறு சுவீகரிக்கப்படவுள்ளனவெனவும் கூறினார். Read more

மன்னார்- தலை மன்னார் பிரதான வீதி, தோட்ட வெளி பகுதியில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற மண் அகழ்வை நிறுத்தக் கோரி அப்பகுதி பெண்கள் இன்று காலை எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

மன்னார்- தலை மன்னார் பிரதான வீதி, தோட்ட வெளி பகுதியில் காடு சார்ந்த நிலப் பிரதேசத்தைக் கொண்ட கிராமத்தில் சுமார் 100இற்கும் அதிகமான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் குறித்த பகுதியில் மீன் வளர்ப்புத் திட்டம் செயல்படுத்துவதாகக் கூறி பல மாதங்கள் மண் அகழ்வில் ஈடுபட்டு வந்துள்ளனர். Read more

யாழ்.கல்வியங்காடு பகுதியில் கேமி குழுவின் தலைவரின் சகோதரனை இனந்தெரியாத நபர்கள் வாளால் வெட்டி கொலை செய்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபரை கல்வியங்காடு பகுதியில் உள்ள பிள்ளையார் கோவிலுக்குப் பின்புறமாக உள்ள வாய்க்கால் பகுதியில் வெட்டு காயங்களுடன் முச்சக்கரவண்டியில் வந்தவர்கள் வீசியதாக அதனைக் கண்ட அப்பகுதியிலுள்ளவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். Read more

நுவரெலியா, வலப்பனை – மலபட்டாவ பிரதேசத்தில் மண்சரிவில் காணாமல் போயுள்ள 15 வயது மாணவனின் சடலம் 3 ஆவது நாளான நேற்றும் கண்டுபிடிக்க முடியாத நிலையில்,

குறித்த மாணவனின் சடலத்தை தேடும் பணிகளை, நேற்று மாலையுடன் நிறைவு செய்ததாக நுவரெலியா மாவட்ட இராணுவத்தின் பிரதானி மேஜர் அசித்த ரணதிலக்க தெரிவித்தார். மேற்படி இடத்தில் ஏற்பட்ட மண்சரிவால் நால்வர் மண்ணுள் புதையுண்டதுடன், அவர்களில் மூவர் சடலமாக மீட்கப்பட்டனர். Read more

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை கூட்டம் இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது. இந்த கூட்டம் இன்று பிற்பகல் 4.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக அமைச்சரவை செயலாளர் எஸ். அமரசேகர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ள இரண்டாவது அமைச்சரவை கூட்டமாக இது அமைந்துள்ளது. Read more