முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள சர்ச்சைக்குரிய விகாரையில் கடந்த 30ம் திகதி முன்றரையடி உயர புத்தபகவான் உருவச்சிலை ஒன்று பாணந்துறைப் பிரதேசத்தில் இருந்து வந்த அசங்க சாமர என்பவர் தலைமையிலான குழுவினரால் பிரதிட்டை செய்யப்பட்ட விடயம், பொதுஜன பெரமுன ஆட்சி குறித்து தமிழ்மக்கள் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பு கொண்டிருந்த அச்ச உணர்வை நியாயப்படுத்துவதாகவே அமைந்துள்ளது.
இரண்டு தரப்பினரதும் வழிபாட்டு நடவடிக்கைகளை தவிர, எந்தவித கட்டுமானப் பணிகளும் முன்னெடுப்பதற்கான தடையுத்தரவை நீதிமன்று வழங்கியுள்ள நிலையிலேயே, அவ்வுத்தரவை அவமதிக்கும் வகையிலும், தமிழ்மக்களை அச்சம் கொள்ள வைக்கும் வகையிலுமே மேற்படி நடவடிக்கை சிங்கள பௌத்த கடும் போக்குவாதிகளால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. Read more