புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை கூட்டம் இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது. இந்த கூட்டம் இன்று பிற்பகல் 4.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக அமைச்சரவை செயலாளர் எஸ். அமரசேகர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ள இரண்டாவது அமைச்சரவை கூட்டமாக இது அமைந்துள்ளது. இந்த கூட்டத்தின் போது அரசாங்கத்தின் புதிய வேலைத் திட்டங்களுக்கமைய பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளன.