தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து மஹிந்த தேசப்பிரியவை பதவி விலக வேண்டாம் என்று அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர்கள் இக் கோரிக்கையை மஹிந்த தேசப்பிரியவிடம் விடுத்துள்ளனர். எவ்வாறெனினும் பதவியில் இருந்து விலகுவதற்கான தனது விருப்பத்தை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு அறிவித்தாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.