இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹோலி இன்று காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்துள்ளார்.

இதன்போது, கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தமது அரசாங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்ததோடு, புதிய நோக்குடன் முன்னோக்கி செல்வும் இலங்கைக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் மிக உயர்ந்த ஆதரவை வழங்குமெனவும் குறிப்பிட்டுள்ளார்.மேலும், இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவுக்குமான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடியதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.