50 ஆயிரம் உதவி ஆசிரியர்களை இணைத்துக் கொள்வதற்கு முன்வைத்துள்ள யோசனை ஊடாக ஆசிரியர் சேவை யாப்பு முழுவதுமாக மீறப்படுவதாக இலங்கை ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன் செயலாளர் ஜோசப் ஸ்டார்லின் இதனை தெரிவித்துள்ளார். குறித்த செயன்முறையை உடனடியாக நிறுத்துமாறு அதிகாரிகளிடம் கோரியுள்ள நிலையில், இதனூடாக ஆசிரியர் சேவையின் தரம் குறைய வாய்ப்புள்ளதாக அவர் கூறியுள்ளார்.