திருகோணமலை- துறைமுக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மனையாவெளி பகுதியில் 4 வயது சிறுவன் ஒருவன் இன்றுகாலை கிணற்றில் விழுந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

செல்வராஜா சினியோன் (04வயது) என்ற சிறுவனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. துறைமுக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.