ஜேர்மனியிலுள்ள மூன்று தமிழ் அமைப்புகள் ஒன்றிணைந்து ஜேர்மனியின் ஸ்ருட்காட் நகரில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன் அவர்கள் எழுதிய ‘அமைப்பாய்த் திரள்வோம்’ என்ற நுல் அறிமுக விழாவினை நேற்றையதினம் (07.12.2019) நடாத்தியிருந்தன.
இலங்கையர் ஜனநாயக முன்னணி, தமிழ் மரபு அறக்கட்டளை, இலங்கை ஜேர்மன் நட்புறவு கழகம் ஆகியன இணைந்தே இந்நிகழ்வினை நடாத்தியிருந்தன. டொக்டர் சுபாசினி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கையர் ஜனநாயக முன்னணியினருடன் தோழர் ஜெகநாதன் அவர்களின் தலைமையில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் ஜெர்மன் கிளையினரும் கலந்துகொண்டிருந்தனர். Read more