இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டார் என தெரிவிக்கப்படும் சுவிஸ் தூதரகத்தின் பெண் அதிகாரி கல்யா பெரிஸ்டர் பிரான்ஸிஸ் இலங்கை குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளாரென தெரிவிக்கப்படுகின்றது.

இன்று அவர் ஐந்து மணித்தியாலங்களிற்கு மேலாக வாக்குமூலம் வழங்கியுள்ளதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன. மார்கழி 09ம் திகதிக்கு முன்னர் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் அவர் சிஐடியினரிடம் வாக்குமூலம் வழங்கவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையிலேயே குறிப்பிட்ட பெண் இன்று தூதரக அதிகாரிகளுடன் சென்று சிஐடியினரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.