Header image alt text

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையோர் என சந்தேகத்தின் பேரில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டோரை சட்டமா அதிபரின் பணிப்புரைக்கமைய வேறுவேறு சிறைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைதான 13 பேரையும் மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டது. Read more

தனியார் பஸ் பயணத்திற்கான பிரயாணச் சீட்டுக்கு பதிலாக காட் முறை அறிமுகப்படுத்தப்படுமென அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இடம்பெறும் மோசடிகளை தவிர்ப்பது இதன் நோக்கமாகும்.

அரைசொகுசு பஸ் சேவைகள் பயணிகளுக்கு உரிய சேவையை வழங்காவிட்டால் அவற்றை சேவையில் இருந்து நீக்குவதற்கும் தீர்மானிக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். Read more

பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகரக காரியாலயத்தில் பாதுகாப்பு ஆலோசகராக செயற்பட்ட பிரிகேடியர் ப்ரியங்க பெர்ணான்டோவிற்கு இராணுவ தலைமையத்தில் புதிய பதவி ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

காணி, சொத்து மற்றும் வாசஸ்தல பணிப்பாளர் சபையின் புதிய பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கமைய அந்த பதவிக்கான கடமைகளை இன்று அவர் ஆரம்பித்ததாக இராணுவ ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. Read more

இலங்கையின் புதிய பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமால் குணரட்ணவிற்கு எதிராக புதிய யுத்தக் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ள சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் என்ற அமைப்பு இது குறித்த பல விபரங்கள் அடங்கிய ஆவணமொன்றையும் வெளியிட்டுள்ளது.

இலங்கையின் இராணுவ தளபதி சவேந்திர சில்வாவிற்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்துவதற்கான வலுவான ஆரம்பகட்ட ஆதாரங்கள் உள்ளதை போன்று கமால் குணரட்ணவிற்கு எதிராகவும் ஆதாரங்கள் உள்ளன என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார். Read more

முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உலக மனித உரிமைகள் தினமான இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் எட்டாம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 1008வது நாளாக தொடர்கிறது. காணாமல் ஆக்கப்பட்டுள்ள தங்களுடைய உறவுகளுக்கு நீதி கோரி இந்த கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்படுகிறது. Read more

முல்லைத்தீவு மல்லாவியில், இன்று அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், 25 வயது இளைஞன் ஒருவர் காயமடைந்துள்ளார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எவரும் இதுவரை அடையாளம் காணப்படவில்லையெனவும் கூறியுள்ளனர். Read more

அனைத்து தேர்தல்களிலும் தேவையற்ற வகையில் களமிறங்கும் வேட்பாளர்கள் தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை எடுக்க தேர்தல் ஆணைக்குழு கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வரும் நிலையில், பாராளுமன்றத்தினால் அதனுடன் தொடர்புடைய சட்டம் தயாரிக்கப்பட வேண்டும் எனவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார். Read more

கடத்தப்பட்டதாக கூறப்படும் சுவிட்சர்லாந்து தூதரகத்தில் பணியாற்றும் அதிகாரி 3 ஆவது நாளாக தற்போது குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.

இதேவேளை, கடத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக அதிகாரி நேற்று இரவு 10 மணி வரை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம் வழங்கியுள்ளார். அதற்கமைய அவர் 2 வது நாளாகவும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம் வழங்கினார். Read more

ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி திட்டத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள மனித மேம்பாட்டு குறிக்காட்டியில் இலங்கை 71 ஆவது இடத்தை பிடித்துள்ளது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இலங்கை ஐந்து புள்ளிகளை பெற்று முன்னிலை அடைந்துள்ளது. 189 நாடுகளில் குழந்தை பிறப்பின் போது எதிர்பார்க்கப்படும் ஆயுற்காலம், எதிர்பார்க்கப்படும் கல்வி, தனிநபர் வருமானம் ஆகியவற்றை மையப்படுத்தி இந்த குறிக்காட்டி தயாரிக்கப்பட்டுள்ளது. Read more

வவுனியா சிதம்பரபுரம் வன்னிகோட்டம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் மாணவன் ஒருவர் பரிதாபமாக உயிரழந்துள்ளார்.

வவுனியாவில் இருந்து சிதம்பரபுரம் நோக்கி சென்ற தனியார் பேருந்து மோட்டார் சைக்கிளில் எதிரே பயணித்த இளைஞர்களுடன் மோதியதிலேயே விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆச்சிபுரத்தைச் சேர்ந்த புண்ணியகுமார் பகிரதன் (வயது 16) (தற்போது இடம்பெற்றுகொண்டிருக்கும் க.பொ.த சாதாரண பரீட்சையில் தோற்றியவர்) Read more