வவுனியா சிதம்பரபுரம் வன்னிகோட்டம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் மாணவன் ஒருவர் பரிதாபமாக உயிரழந்துள்ளார்.

வவுனியாவில் இருந்து சிதம்பரபுரம் நோக்கி சென்ற தனியார் பேருந்து மோட்டார் சைக்கிளில் எதிரே பயணித்த இளைஞர்களுடன் மோதியதிலேயே விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆச்சிபுரத்தைச் சேர்ந்த புண்ணியகுமார் பகிரதன் (வயது 16) (தற்போது இடம்பெற்றுகொண்டிருக்கும் க.பொ.த சாதாரண பரீட்சையில் தோற்றியவர்)என்ற மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றொரு இளைஞர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில். விபத்து தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.