ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் டொசிம்ட்சு மொட்டெகி இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு, இன்று (12) மாலை 5.30 மணிக்கு இலங்கைக்கு வருகைத் தரவுள்ளார்.14ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் அவர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் தினேஸ் குணவர்தன ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.