Z-Score அடிப்படையில் பல்கலைகழகத்துக்கு மாணவர்களை தெரிவு செய்வதற்காக  பாடசாலை ரீதியில் புதிய முறை ஒன்றினை அறிமுகப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.தற்போது, மாவட்ட ரீதியிலான முறை பயன்படுத்தப்படுகின்றது.

புதிய முறையினை அறிமுகப்படுத்துவதற்காக கல்விமான்கள் உள்ளடங்கிய குழு ஒன்றினை நியமிப்பதற்கு கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும முன்வைத்த பிரேரணைக்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.