“தமிழ்த் தேசியக் கட்சி” என்ற பெயரில் புதிய கட்சியொன்றை, இன்று (15) அங்குரார்ப்பணம் செய்துவைத்த, தமிழீழ விடுதலை இயக்கத்திலிருந்து (டெலோ) நீக்கப்பட்ட கட்சியின் செயலாளர் என்.ஸ்ரீகாந்தா, தமிழ்த் தேசியக் கட்சிகள் பல இணைந்து, புதிய தலைமைத்துவத்தின் கீழ் மாற்றுத்தலைமையை உருவாக்கவுள்ளோம் என சூளுரைத்தார்.

இந்த அங்குரார்ப்பண நிகழ்வும் ஊடக சந்திப்பும், யாழ்ப்பாணம்– நல்லூரில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

கட்சி தொடர்பான அறிவிப்பை விடுத்த அக்கட்சியின் தலைவர் ஸ்ரீகாந்தா, தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளராக அரசியல்வாதி எம்.கே.சிவாஜிலிங்கம், துணைத் தலைவராக சிவகுருநாதன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்றார்.

கட்சியின் சட்டத்தரணியாக ஜெயச்சந்திரனும், தேசிய அமைப்பாளராக சில்வஸ்டர் விமல்ராஜூம் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்றார்.